Thursday, July 2, 2009

பிரிவு

நொடிக்கு
நூறு முறை இறப்பேன்...
என் மரணம்
உன் மடியில் என்றால்!
இறந்த மறு நொடியில் பிறப்பேன்!
மீண்டும்
உன்னுடன் வாழ்வேன் என்றால்!...

நான்
கடவுளிடம் கேட்டு
கொடுக்காத வரம் நிறைய...
ஆனால்
நான் கேட்காமலே கொடுத்த வரம்
"நீ!"

நீ அருகில் இருந்த பொது...
அடிபட்ட காயத்தின் வலி கூட தெரியவில்லை!
நீ அருகில் இல்லாததால்...
இதயத்தின் துடிப்பு கூட வலிக்கிறது!

1 comment:

Anonymous said...

really super