Tuesday, July 28, 2009

நிலா ரசிகனின் கவிதைகள்

நான் எழுதியவை
அனைத்தும் வெறும்
வார்த்தைகள்...
என்றாவது இதை
நீ படிக்க நேர்ந்தால்
ஒரு வேளை கவிதையகலாம்!


யார் யாரோ
நம் நேசத்தை
நிராகரித்த போதெல்லாம்
கலங்கிவிடவில்லை
நீ யாரோ
நான் யாரோ
என்று நீ
சொல்லும் வரையில்...

அன்று
உன் பார்வை அலைகளால்
என்னை அடித்தாய்..
இன்று
ஏன் இதயப்பாதையில்
உன்
நினைவுப்பாசிகள்..


பிரிந்தவளே..
தென்றலுக்கே சிறகுகள்
தந்தவள் நீ..
எனக்கு மட்டும்
ஏன் சிலுவைகள்
தந்துவிட்டாய்?

அழும்போது கூட
கண்ணீர் வராமல்
கஷ்டப்பட்டு அழுகிறேன்
கண்ணீரோடு உன்
நினைவுகளும் கரைந்து விட்டால்
என்ன செய்வேன்?

உயிரானவளே
கவிதையிலேயே
உன்னை இவ்வளவு
நேசிக்கிறனே..
ஒரு வேளை நிஜத்தில்
நீ கிடைத்திருந்தால்
உன்னை எப்படியெல்லாம்
நேசித்திருப்பேன்..
ஏனடி பிரிந்தாய்?
கேள்விகளோடு போய்விடுகிறது
என் வாழ்க்கை

seo company india

No comments: