நொடிக்கு நூறு முறை இறப்பேன்...
என் மரணம் உன் மடியில் என்றால்...
இறந்த மறு நொடியில் பிறப்பேன்,
மீண்டும்
உன்னுடன் வாழ்வேன் என்றால்...
கண்கள் செய்த சிறிய தவறுக்கு
இதயம் அனுபவிக்கும் ஆயுள் தண்டணை
"காதல்"
"மரணம்" என்றால், பயந்து விடுகிறேன்!
இறந்து விடுவேன் என்பதற்க்காக அல்ல!
உன்னைப்
பிரிந்து விடுவேன் என்பதற்க்காக!...
உன்னைக் காணத் துடிக்கிற கண்களுக்கு
எப்படி புரிய வைப்பேன்?
"நீ" என் இமைகள் என்று!
துடிக்க மட்டும் தெரிந்த என் இதயத்திற்கு
தவிக்கவும் கற்றுக் கொடுத்துவிட்டது
உன் "காதல்"
ஆயிரம் அடி தோண்டியும் கிடைக்கவில்லை ,
"தண்ணீர்"
ஒரு அடி என்னை விட்டு நகர்ந்தாய்!...
என் கண்களில் தோன்றியது,
"கண்ணீர்!"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment