Tuesday, June 30, 2009

மௌனம்

பக்கம் பக்கமாய் பேச நினைக்கிறேன்!
ஆனாலும்,
நீ பக்கத்தில் வரும்போது, முந்திக்கொள்கிறது
என் மௌனம்!...

சில நினைவுகள் பல உறவுகளை நினைவு படுத்தும்...
ஆனால்,
எனக்கு "உறவுகளே" உன் நினைவுகள் தான்!

முதன் முறையாக
என்னை நினைத்து
நீ கண்ணீர் விடுகிறாய்!
எழுந்து உன் கண்களைத்
துடைக்க முயல்கின்றேன்,
நான் இறந்து விட்டேன்
என்பதையும் மறந்து!...

seo company chennai

No comments: